TamilsGuide

சஜித்திடம் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் சரத் பொன்சேகா

நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் நாட்டை பொறுப்பேற்க தவறியதன் காரணமாகவே சஜித்பிரேமதாசவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்திருந்ததாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான சரத்பொன்சேகா இன்று பங்கேற்றிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது இதனை தெரிவித்திருந்தார்

நாடு நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாக பதவிவகித்த கோட்டாபய ராஜபக்ஷ தப்பிச்சென்றபோது நாட்டை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

எனினும் அவர்குறித்த பொறுப்பில் இருந்து விலகிச்சென்றதாகவும் பீல்ட்மார்ஷல்சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை தாம் எந்தவொரு கட்சிசார்பாகவும் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

அதனாலேயே தேர்தலில் சுயாதீனவேட்பாளராக போட்டியிடுவதற்கு தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment