TamilsGuide

தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன்

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பாக்கியசெல்வம் அரியநேத்திரன் இன்று, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை இன்று பிற்பகல் 3 மணிக்கு முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் தமிழ் பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும்;; பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டத்தினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment