• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிராம உத்தியோக சங்கத்தின் போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

இலங்கை

கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் கறுப்பு எதிர்ப்புவாரம் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்துவதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நிறைவடையும் வரை தடையின்றி தமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தடையின்றி முன்னெடுக்கவுள்ளதாகவும், கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள், தேர்தல் உத்தியோகத்தர் என்பதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க இன்று (18) தெரிவித்தார்.

கிராம அலுவலர் சேவை யாப்பு மற்றும் கிராம அலுவலர் கொடுப்பனவுகளை தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி நாடு முழுவதிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் கடந்த மே மாதம் 4ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கினர்.

இந்நிலையில் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஓகஸ்ட் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கறுப்புப் போராட்ட வாரத்தை ஆரம்பித்திருந்த நிலையில், இன்று நள்ளிரவுடன் போராட்டம் நிறைவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மே 17ஆம் திகதி முதல் கிராம உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி சேவை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply