• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கவில்லை-மைத்திரி

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் தாம் தொடர்பில் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கருத்து தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ். எம். மரிக்கார் முன்னாள் ஜனாதிபதியுடன் கூட்டு சேர்வதற்கோ அல்லது அவ்வாறான ஆதரவைப் பெறுவதற்கோ தேவை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply