• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பூண்டுலோயாவில் பாரிய தீ விபத்து - 25 லைன் வீடுகள் தீக்கிரை

இலங்கை

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சீன் லோவர் தோட்டத்தில் நேற்றிரவு  இரவு   ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக  25 லைன்  வீடுகள் தீக்கரையாகியுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இத் தீவிபத்தினால் 25 வீடுகளை சேர்ந்த 86 பேர் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர் எனவும், அவர்கள் தற்போது  ஆலய மண்டபம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீவிபத்து இடம்பெற்ற வேளை நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கபட்டதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply