• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் காணாமல் போன தமிழர் தொடர்பில் உறவினர்கள் வெளியிட்டுள்ள தகவல்

கனடா

கனடாவில்(Canada) கடந்த வாரம் காணாமல் போன தமிழர் ஒருவர் திட்டமிட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என அவர்களது உறவினர்கள் அந்நாட்டு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரம்டன் பகுதியை சேர்ந்த 65 வயதான யோகராஜ் என்ற தமிழர் காணாமல் போயுள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை கண்டுபிடிக்கும் தீவிர நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி க்ரிக் மற்றும் விட்டொப்பி வீதிகளுக்கு அருகாமையில் யோகராஜ் இறுதியாக தென்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன யோகராஜ் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரமானவர் எனவும் சுமார் 150 பவுன்ட் எடையுடையவர் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

மேலும், இறுதியாக நீல நிற சட்டையும், கறுப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை வழங்குமாறு பீல் பிராந்திய காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply