TamilsGuide

பிக்பாஸ் சீசன் 8-ன் புதிய தொகுப்பாளர் - வெளியான புதிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார்.

சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை" என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார்..

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முந்தைய சீசன்களில், கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவருக்கு பதில் நடிகர் சிம்புவும், மற்றொரு எபிசோடில் ரம்யா கிருஷ்ணனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

அதனால், கமல் பிக்பாஸில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சிம்பு பிக்பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவார் என்று தகவல் பரவியது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெரிய தொகையை வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் மறுபடியும் தொலைக்காட்சிக்கு திரும்ப விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதி ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. பெரும்தொகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நயன்தாராவும் ஆர்வம் காட்டுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், இருவரில் ஒருவரை இறுதி செய்து விரைவில் பிக்பாஸ் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a comment

Comment