TamilsGuide

செஞ்சோலை படுகொலை - உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி

முல்லைத்தீவு, வள்ளிபுனம் -செஞ்சோலை வளாகத்தில் இராணுவத்தின் விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு செஞ்சோலை வளாகத்தில் இன்று உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்ப்பட 61 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வில் முன்னாள்  வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்னான் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் குகனேசன் பொதுமக்கள் சமூகசெயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment