• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தல் ஆணையாளரின் விசேட அறிவிப்பு

இலங்கை

“மாற்றுத்திறனாளிகள் தமக்கு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டையை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு பயன்படுத்த முடியும்” என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இம்முறை மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக அடையாள அட்டையை வழங்கியுள்ளோம். குறித்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்க முடியும்”இவ்வாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply