• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டெலிகிராப் நாளிதழின் ஆசிரியராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்

டெலிகிராப் செய்தித்தாளின் ஆசிரியராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலிக்கப்பட்டுள்ளார்.

டெலிகிராப் (Telegraph) நாளிதழின் தலைமை ஆசிரியராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. இதை அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

நதிம் ஜஹாவி (Nadhim Zahawi) அந்த நாளிதழை வாங்குவார் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.

இதன் பின்னணியில்தான் போரிஸ் ஜான்சன் ஆசிரியர் பதவி குறித்து நதீம் ஜஹாவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறியப்படுகிறது.

ஸ்கை நியூஸின் ஒரு செய்தியின்படி, போரிஸ் டெலிகிராப் செய்தித்தாளில் தலைமை பொறுப்பை வகிக்க ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் இது குறித்து இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, Barclay குடும்பம் டெலிகிராப்பை நடத்தினார். ஆனால், தற்போது அந்த நிறுவனத்தால் நிலுவைத் தொகையை செலுத்த முடியாததால், நிறுவனம் ஏலம் விடப்பட்டது.

இந்த இதழை வாங்க பல கோடீஸ்வரர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. 
 

Leave a Reply