• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது

இலங்கை

நாட்டில் ஊழல் அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கியுள்ளது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்  மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”15 ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்து நாம் 16 ஆம் திகதி தலதாக மாளிகைக்கு செல்லவுள்ளோம். அதேபோல் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களுக்கும் செல்லவுள்ளோம்.

தேர்தல் தொடர்பான முதலாவது மாநாடு குருணாகலில் இடம்பெறவுள்ளது. சஜித் பிரேமதாச தேர்தலில் அமோச வெற்றியீட்டி இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். நாம் டீல் அரசியலில் ஈடுபடுபவர்கள் அல்ல” இவ்வாறு ரஞ்சித்  மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply