• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசாரம் விநியோகம்

இலங்கை

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறுக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கொக்குவில் சந்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கிய இவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
 

Leave a Reply