• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் வண்ணமயமான ஒளி காட்சி... காண மக்களுக்கு அரிய வாய்ப்பு! 

இலங்கை

பிரித்தானிய விண்கல் மழையைத் தொடர்ந்து, skygazers அரோரா பொரியாலிஸ் என்றும் அழைக்கப்படும் விளக்குகள் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஸ்காட்லாந்து, வடக்கு பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள மக்கள் வண்ணமயமான ஒளி காட்சியைக் காண முடியும் என்று பிரித்தானிய வானிலை அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நியூகேஸில், பெல்ஃபாஸ்ட் மற்றும் ஐல் ஆஃப் மேன் போன்ற தெற்கே உள்ளவர்கள் இரவு நேரம் கழித்து வடக்கு நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த ஒளியை பார்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.

தெற்கே மிகத் தொலைவில் இருப்பவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் கமரா மூலம் வண்ணமயமான ஒளியை பார்வையிட முடியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply