சரத் பொன்சேகா தவிசாளர் பதவியிலிருந்து இராஜினாமா
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளதுடன் அதற்கான கட்டுப்பணத்தையும் அவர் கடந்த 5ஆம் திகதி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.