• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு-சுகாதார அமைச்சர்

இலங்கை

அரசாங்க வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் ரேம்ஷ் பத்திரன தெரிவித்துள்ளார்

இன்று நாடாளுமன்றத்தில் மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் வைத்தியசாலைகளில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது சட்டமூலங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply