தமிழ்கூறும் நல்லுலகின் தகைசார் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா அவர்கள் எழுதிய நூல்களின் வெளியீடு!
கனடா
யாழ்.இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையுடன் நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் யாழ்.கலாசார நிலையத்தில் நடைபெற்ற பேராசிரியர் சி.சிவலிங்கராஜா அவர்கள் எழுதிய இந்திய இலங்கை கல்வி சமய
பண்பாட்டு பாலம் ஆறுமுகநாவலர் 200 ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு மலர், யாழ்ப்பாணத்தில் இந்திய ஆசிரியர்களின் கல்விப்பணி (கவிஞர் சோ.ப அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. The Contribution of
Indian Teachers towards the Development of Education in Jaffna ) நூல்களின் வெளியீட்டு விழா.
நூல்களினை யாழ்.இந்திய துணைத்தூதுவர் வெளியிட்டு வைக்க முதல் பிரதியினை சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.