• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எமது ஆட்சியில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்போம்- சஜித்

இலங்கை

”ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இடையில் கொள்கை ரீதியில் ஒற்றுமை உள்ளது” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர தலைமையிலான கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  இன்று முற்பகல்  கைச்சாத்திடப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மக்கள் போராட்டத்தின் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து நாட்டு மக்கள் அரசாங்கம் தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர்.

நாட்டு மக்களின் நம்பிக்கையினை காப்பாற்றுவதே ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் இடையில் கொள்கை ரீதியில் ஒற்றுமை காணப்படுகின்றது.

அரசியல் நோக்கத்திற்காக சந்தர்ப்பவாத உடன்படிக்கையாக இன்றைய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை நாம் ஊழல் ஆட்சிக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.

ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதுடன் மக்களை மையப்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும். பதவி நிலைகளினால் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்பமுடியாது.

பதவி நிலைகளின் பொறுப்பினை சரிவர நிறைவேற்ற வேண்டும் அதுவே சிறந்த தலைமைத்துவமாகும். எமது ஆட்சியில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைப்போம்” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply