• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் வர்த்தகர் படுகொலை

இலங்கை

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை முற்றுகையிட முற்பட்ட வேளையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கு ஏறாவூர் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a Reply