• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணதாசன் - எம்.எஸ்.வி - ஸ்ரீதர் கூட்டணி என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

சினிமா

ஒரு மணி நேரத்தில் சோக பாடலை எழுதி, அரை நாளில் அந்த பாடலை பதிவு செய்து அன்றே அந்த பாடலுக்கான காட்சியை படமாக்கி வென்றி கண்டுள்ளது கண்ணதாசன் - எம்.எஸ்.வி - ஸ்ரீதர் கூட்டணி என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று போற்றப்படும் ஸ்ரீதர் இயக்கத்தில், 1962-ம் ஆண்டு வெளியான படம் போலீஸ்காரன் மகள். பாலாஜி, முத்துராமன், விஜயகுமாரி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் ராமூர்த்தி இணைந்து இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் பாடல் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட இருந்தது. படத்தின் நாயகியாக விஜயகுமாரி தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்ட நிலையில், அவரது அப்பா, அம்மா, அண்ணன், காதலன் என அனைவரும் வந்து அழுவது போன்ற க்ளைமேக்ஸ் கட்சியை படமாக்கும்போது, இயக்குனர் ஸ்ரீதருக்கு இந்த இடத்தில் ஒரு பாடல் வைத்து, விஜயகுமாரி, ஆவியாக அனைவரிடமும் ஆசீவாதம் வாங்குவது போல் வைத்தால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியுள்ளது.

ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இன்றுடன் முடியபோகிறது என்பதால், பாடல் வேண்டும் என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.வியை வரவழைத்துள்ளனர். அங்கு வந்த எம்.எஸ்.வி, ஸ்ரீதர் சொன்னதை கேட்டு, நான் ரெடி, கவிஞரை எப்படி பிடிப்பது என்று கேட்க, அவருக்கும் போன் செய்துள்ளனர். அப்போது கண்ணதாசனும் செட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் மதியம் ஷூட்டிங் நடக்கனும், இந்த பாடலை ஷூட் செய்யனும். அதற்குள் பாடல் எழுதி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

காலை 10 மணிக்கு இயக்குனர் ஸ்ரீதர் சொல்ல, உடனடியாக பாடலை எழுதிய கண்ணதாசன், அதை எம்.எஸ்.வியிடம் கொடுக்க, அவர் அதற்காக டியூன் அமைத்து, அப்போதே, பாடகர் சீர்காழி கோவிந்தராஜனை அழைத்து பாடவைத்து பதிவு செய்துள்ளார். அதன்பிறகு ஸ்ரீதர் கேட்டது போலவே மதியம் அவருக்கு பாடல் கிடைக்க, உடனடியாக படப்பிடிப்பை தொடங்கி முடித்துள்ளார். அன்று மாலையே படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது.

போலீஸ்காரன் மகள் படத்தில் இடம் பெற்ற, க்ளைமேக்ஸ் பாடலான பூ சுமந்து போகின்றாள் என்ற பாடல் தான் கவியரசர் கண்ணதாசன் வேகமாக எழுதி முடித்த பாடல் என்று அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply