• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பாறையில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை

இலங்கை

அம்பாறை, பகுதியில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பாறை இகினியாகல நாமல் ஓயா பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரியும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மொனராகலை கரடுகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அம்பாறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு பெண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் 17 மற்றும் 54 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

எனினும், இந்த பெண்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், இந்த மூன்று சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா? என்பது தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply