• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியலில் நீண்டகால நண்பரும் இல்லை எதிரியும் இல்லை – ரணிலுக்கே ஆதரவு – ரோஹித

இலங்கை

மக்கள் தொடர்பாகச் சிந்தித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொிவித்துள்ளாா்.

களுத்துறையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

அரசியலில் நீண்டகால நண்பரும் இல்லை எதிரியும் இல்லை. நாம் இந்த நாட்டில் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு இனங்களாக வாழ்கின்ற போதிலும் அனைவரினதும் எதிர்ப்பார்ப்பு ஒன்றாகவே காணப்படுகின்றது.

இந்த நாட்டில் அனைவரும் நெருக்கடியில் இருந்து மீண்டு அனைவரும் நிம்மதியாக வாழவேண்டும் எனவே நாடு தொடர்பாகவும், மக்கள் தொடர்பாகவும் சிந்தித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவைப்படுகின்றார்.

அவ்வாறான ஒருவரின் கருத்துக்கு நான் மதிப்பளிக்கின்றேன். எனவே எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன்.

இந்த அரசியலில் கொள்கை திட்டங்கள் இல்லாதவர்கள் என்றால் தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியுமாகும்” என மேலும் தொிவித்துள்ளாா்.
 

Leave a Reply