• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது

இலங்கை

”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கிடையில் டீல் அரசியல் உள்ளது. தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிப்பதற்காகவே இவர்கள் டீல் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தற்போது பொதுஜன பெரமுனவில் 92 உறுப்பினர்கள் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். எனவே ராஜபக்ஷ தரப்பினர் ஆதரவு வழங்கினாலும் இல்லாவிட்டாலும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு உறுதியாகியுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply