• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குற்றத்தை மறுத்தார் டயானா

இலங்கை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளி அல்ல நிரபராதி என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தமக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 07 குற்றப்பத்திரிகைகளை வாசித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இந்த விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply