• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் - கட்டுப்பணத்தைச் செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

இலங்கை

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான  விஜயதாச ராஜபக்ஷ, இன்று  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேவேளை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் (7) வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply