• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் - ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

இலங்கை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஐவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மற்றும் சரத் கீர்த்தி ரத்ன ஆகியோர் சுயாதீன வேட்பாளர்களாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் சிவில் சமூகசெயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் மற்றும் வர்த்தகர் ஏ எஸ் பி லியனகே ஆகியோரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களாக ஏற்கனவே கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சஜித் பிரேமதாஸ சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply