• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்

இலங்கை

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா பம்பைமடு பகுதியில் கடந்த 25 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று கொண்டிருந்தபோது அங்கு வருகை தந்த ஒருவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  கோரி கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் பல்வேறு பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply