உங்கள் படத்தின் பெயரிலேயே வாலி இருக்கிறதே…
சினிமா
உலகம் சுற்றும் வாலிபன் பட தயாரிப்பு வேலைகள் தொடங்கியபோது எம்.ஜி.ஆர். வாலியிடம், “இந்தப் படத்தில் உங்களுக்கு பாடல் எழுத சான்ஸ் தரப் போவதில்லை” என்று விளையாட்டாக சொன்னார். வாலியும் விடவில்லை, சிரித்தபடியே, “என்னுடைய பெயர் இடம்பெறாமல் உங்களுடைய படமே வெளிவராது” என்று சொல்லிவிட்டார்.
சிறிது நேரத்தின் பின் எம்.ஜி.ஆர். “அது எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்” என்று கேட்டிருக்கிறார். அதற்கு வாலி சிரித்துக்கொண்டே,.
“என்னுடைய பெயர் இல்லாமல் நீங்கள் படத்தை வெளியிடுவதானால், ‘உலகம் சுற்றும்" பன் " என்றுதான் வெளியிட வேண்டும். உங்கள் படத்தின் பெயரிலேயே ‘வாலி’ இருக்கிறதே…” என்றாராம் .