• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்களின் எண்ணத்திற்கேற்ப ஆக்ஷன் படத்தில் விரும்பி நடிக்கிறேன்- அருண் விஜய்

சினிமா

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடிகர் அருண் விஜய் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அவருக்கு பேராலய பங்குதந்தை அற்புதராஜ் ஆசி வழங்கினார்.

பின்னர் அருண் விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

ஜனரஞ்சகமான திரைப்படங்களை மக்கள் விரும்புவதால் ஆக்ஷன் படத்தில் விரும்பி நடிக்கிறேன். தற்போது நடித்து வரும் 'ரெட்ட தல' திரைப்படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. இறுதிக்கட்ட சண்டை காட்சிகள் வேளாங்கண்ணி , வெள்ளைற்று அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. காலம் வரும்போது அப்பா முத்திரை பதித்த 'நாட்டாமை' திரைப்படம் போல் நானும் அதுபோல் படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.

'வணங்கான்' திரைப்படப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளது. அப்படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தை காதலித்து நடித்தேன். டைரக்டர் பாலா அப்படத்திற்காக கூடுதலாக உழைத்தார். அவரது இயக்கத்தில் நடித்தது சுகமான, பிரமாதமான அனுபவம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடிகர் அருண் விஜயை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
 

Leave a Reply