• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இராஜாங்க அமைச்சரால் உயிா் அச்சுறுத்தல் – சாணக்கியன்

இலங்கை

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் இதுதொடர்பாக சபாநாயாகர் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”லங்கா ஈ நியுஸ் என்ற தளத்தில், என்னை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் ஊடாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பிலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரே என்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராஜாங்க அமைச்சர் இதற்கு முன்னரும், கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்தார்.

அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்திலும் இவருக்கு தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக விசாரணையொன்றை நடத்த வேண்டும்.

இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை எனக்கு தெரியாது என்றாலும், இதுதொடர்பாக தேடிப்பார்க்க வேண்டும்.

ஏனெனில், குறித்த இராஜாங்க அமைச்சர் இதற்கு முன்னரும் கொலை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார் என்பதால், சபாநாயகர் ஊடாக இதனை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என அவா் மேலும் தொிவித்தாா்.
 

Leave a Reply