• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யுக்திய - 24 மணித்தியாலங்களில் 732 சந்தேக நபர்கள் கைது

இலங்கை

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ், 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 719 ஆண்களும் 13 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 127 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் அனைவரும், போதைப்பொருள் குற்றம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து, 178 கிராம் 303 மில்லிகிராம் ஹெரோயின், 327 கிராம் 281 மில்லிகிராம் ஐஸ், 1,907 கிராம் 588 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 3,405 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply