• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50 பேர் பலி

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல காயமடைந்து வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் நேற்று முன்தினத்திலிருந்து கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் தற்போது நிவாரணக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
 

Leave a Reply