• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அத்துரிகிரிய சம்பவம் -7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலை

இலங்கை

அத்துரிகிரிய பச்சை குத்தும் மையத்தில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களும் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்

பச்சை குத்தும் மையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்

இன்னிலையில் அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply