• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் தலைமறைவு

இலங்கை

சாய்ந்தமருதியில் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09 இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

32 வயதுடைய சந்தேக நபர் றிஸ்வி முஹம்மட் அன்சார் என்ற சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார் . திருமணமான தனது மகளை விவாகரத்துச் செய்யத் தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிவடைந்துள்ளதாக அடிப்படை விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

அடிக்கடி இவ்விடயத்தினால் தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன், போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply