• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளப் வசந்த கொலை – பெண்ணொருவர் கைது

இலங்கை

‘கிளப் வசந்த’ என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் 21 வயதுடைய பெண்ணொருவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அத்துருகிரிய பகுதியில் பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவின்போது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பச்சை குத்தும் நிலைய நிலைய உரிமையாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே யுவதி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த பெண் அத்துருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே அத்துருகிரிய கொலைச் சம்பத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
 

Leave a Reply