• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அலி சப்ரி பிணையில் விடுதலை

இலங்கை

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  இன்று அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று  அவர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில்  சட்டத்தரணியுடன் சரணடைந்த போது கைது செய்யப்பட்டடிருந்தார்.

இதனையடுத்து அவரைக் கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a Reply