• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாகன இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு

இலங்கை

”எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ”அதிக மின்சார வாகனங்களை நாட்டுக்குக்  கொண்டு வருவதில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பான அறிக்கை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply