• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பசளை மானியத்திற்கான பணம் விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பசளை மானியத்திற்கான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 9091விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஒன்பது கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு 7272.35 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு  109,085,227.50ரூபாய்  இதுவரை வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு படிப்படியாக வங்கிக் கணக்குகளில் இடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply