• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் டயானா

இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி  உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை அவர் இன்று வாபஸ் பெற்றார்.

இந்த மனுவானது  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ​​குறித்த மனுவைத்  தொடர வேண்டிய அவசியம் இல்லை என  டயானா கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த மனுவை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 

Leave a Reply