• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேலைக்காக ரூ.83 லட்சத்தை நிராகரித்தவர்

வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்த காலத்தில், சம்பளம் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் என்றால் ஒரு ஊழியர், வேறுநிறுவனத்திற்கு எந்த நேரத்திலும் மாறிவிட தயாராகிவிடுவார். ஆனால் எல்லோரும் அப்படித்தானா?

பணி செய்யும் இடத்தில் விசுவாசமும், பணியின் மீது மரியாதையும் வைத்திருக்கும் ஊழியர்களை கண்டுபிடிக்கும் சிறிய சவால் நிகழ்ச்சியாக ஒரு நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.

அவர்கள், சில ஊழியர்களிடம் அதிகப்படியான பணத்தை காட்டி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை உடனடியாக விட்டுவிடுவீர்களா? என்று கேட்டு வீடியோ பதிவு செய்தது. அப்படி ஒரு உணவக ஊழியரிடம் ரூ.83 லட்சம் பணத்தை கட்டுக்கட்டான நோட்டுகளாக நேரடியாக நீட்டுகிறார்கள்.

இந்த வேலையை விட்டுவிட முடியுமா என்று கேட்கிறார்கள். ஆனால் அவர், நான் இந்த வேலையை விடமாட்டேன் என்று பணியில் விசுவாசமாக இருக்கிறார். இறுதியில் அந்த நபரின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை பாராட்டி குறிப்பிடத்தக்க தொகையை அவருக்கு பரிசாக வழங்கினார்கள் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். உணவக நிறுவனமும் ஊழியரை பாராட்டியது. இந்த வீடியோவை எக்ஸ் வலைத்தளத்தில் 1.5 கோடி பேர் ரசித்து உள்ளனர்.
 

Leave a Reply