TamilsGuide

அத்துருகிரிய படுகொலை - கிளப் வசந்தவின் மனைவி கவலைக்கிடம்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கிளப் வசந்தவின் மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு – அத்துருகிரிய பிரதேசத்தில், கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் பிரபல வர்த்தகரான கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த என்பவரும் அவரது பாதுகாவலரும் கொள்ளப்பட்டார்.

இதேவேளை அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில்அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment