TamilsGuide

ரொறன்ரோவில் வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டொரன்டோவில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இன்றைய தினம் டொரன்டோவின் வெப்பநிலை 29 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும் எனவும் காற்றின் ஈரப்பதனின் அளவு அடிப்படையில் இந்த வெப்பநிலையானது சுமார் 37 பாகை செல்சியஸ் அளவாக உணர நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் அநேகமான பகுதிகளில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய தேசிய வளிமண்டலவியல் முகவர் நிறுவனம் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் காற்றின் தரம் குறைவடையும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, செவ்வாய்க்கிழமையும் 29 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.     
 

Leave a comment

Comment