TamilsGuide

வேவல்தெனிய பிரதேசத்தில் விபத்து-15 பேர் காயம்

கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் வேவல்தெனிய பிரதேசத்தில் இன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment