TamilsGuide

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகையுடன் கைதான யாழ்ப்பாண நபர்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்க நகைகளை அணிந்து வந்த பயணி ஒருவரை கைது செய்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம் (30-06-2024) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment