TamilsGuide

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக் குத்து

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாகக் கத்திக்குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இக் கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுபோவில வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபரைப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சில போதை மாத்திரைகள் மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதலை மேற்கொண்டவர்  மஹரகம பிரதேசத்தைச்  சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment