TamilsGuide

அரசியல் நோக்கம், ஆதாரமற்றது: காஷ்மீர் குறித்து ஐ.நா.வில் பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் குழந்தைகள் மற்றும் ஆயுதங்கள் விதிமீறல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் குறித்து பேசினார். அதற்கு இந்தியாவுக்கான ஐ.நா.வின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர். ரவீந்திரா கடும் கண்டனம் தெரவித்ததுடன், தக்க பதிலடி கொடுத்தார்.

குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ள நிலையில், அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி. எந்த தடையுமின்றி பாகிஸ்தானில் தொடர்ந்து மீறல்கள் நடைபெற்று வருகிறது.

எங்கள் நாட்டிற்கு எதிராக ஒரு பிரதிநிதி கூறிய குற்றச்சாட்டுக்கு காலத்தின் நலன் கருதி இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது என குறுகிய பதில் அளிக்கிறேன். இந்த அடிப்படையற்ற கருத்துகளை நான் திட்டவட்டமாக நிராகரித்து அவர்களை கண்டிக்கிறேன் என்றார்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட பிரதிநிதி அல்லது அவரது நாடு எதை நம்பினாலும் அல்லது விரும்பினாலும், அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தன, எப்போதும் இருக்கும் என்றார்.
 

Leave a comment

Comment