TamilsGuide

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கத் தயாரில்லை – ராஜித

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க 15 – 20 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரித்துள்ளார்

எவ்வாறாயினும், தாம் தற்போதைக்கு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெறத் தயாரில்லை எனவும், எனினும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க தாம் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment