TamilsGuide

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்-அதிபர் சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே  ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் மதிப்பீடு தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று  நடைபெறாது  என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எனினும் நாளை (28) முதல் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment