• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் 773 நபர்கள் கைது-பொலிஸ் தலைமையகம்

இலங்கை

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 773 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ள 34 சந்தேக நபர்களும் உட்பட 807 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி 52 கிலோ 616 மில்லிகிராம் ஹெரோயின், 142 கிலோ ஐஸ், 453 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

இதேவேளை இந்த விசேட ந்டவடிக்கையின் போது 03 பாதாள உலக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 778 பாதாள உலக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply