TamilsGuide

அரச உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத்  தீர்வு வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஒவ்வொரு துறையிலும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக
முறையான முறைமை ஒன்றை பின்பற்றுகின்றோம்.

அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நியாயமான பதில் வழங்கப்படும். சுமார் நான்கு வருடங்களாக தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தையே
அரசாங்கம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் கோரிக்கையை வென்றெடுக்ககூடிய சூழல் உருவாகும் என்பதை தொழிற்சங்கங்கள் நன்கு அறிந்திருப்பதால், ஒரு குழுவினர் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்” இவ்வாறு ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment