TamilsGuide

குளவி கொட்டியதில் 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மூதூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்பில் கலந்துகொண்டிருந்த வேளை இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான அனைவரும் தற்போது மூதூர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருவதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Comment